• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Diffrently Abled Section : Conveniently located at the Ground floor, the Diffrently Abled Section has 1000 printed books in Braille format, audio books etc. Four numbers of wheel chairs are available at the section for the use of Differently Abled users.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

KCL Expresso : Intelligence Speaks - “ IoT in Agriculture " (விவசாயத்தில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ) - Dr.R,Perumalraja, Vice Principal, Vellammal College Engineering and Technology, Madurai |மாலை 5.00 மணி

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 03.10.2024 வியாழக்கிழமை அன்றுIoT in Agriculture (விவசாயத்தில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ) என்ற தலைப்பில்,Dr.R,Perumalraja, Vice Principal, Vellammal College Engineering and Technology,  Madurai அவர்களின் உரையானது பல்வகைப்  பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு  நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள்  தங்கள் பெயரினை Hall ; https://tinyurl.com/yc2sbkjd லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  



காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சி 05/10/24 காலை 10:30 மணி "இந்திய சுயராஜ்யம் நூல்" கலந்துரையாடல்

 அனைவருக்கும் வணக்கம்! 


நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சியாக இந்திய சுயராஜ்யம் நூல் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி (05/10/24) சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு நூலக பல்வகை பயன்பாட்டு அரங்கில் நடைபெற இருப்பதால் வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் அனுமதி இலவசம்.



சிகரம் தொடு 05/10/24 சனிக்கிழமை காலை 11 மணி Railway, SSC, BANK தேர்வை வெல்வது எப்படி?

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் இன்று 05/10/2024,  RAILWAY, SSC, BANK  தேர்வை வெல்வது எப்படி? என்ற தலைப்பில் திரு. திலிப் குமார் (station master/section controler)  பயிற்சி  அளித்தார்,  மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். இதில்  பெரும்பாலான போட்டித் தேர்வு  மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர் என்பதை இங்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி.






வேர்கள் (அனுபவ பகிர்வு ) 28.09.2024 சனிக்கிழமை காலை 11.00 "செவிக்கு உணவு இல்லாத பொழுது "

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்னும் தொடர் நிகழ்ச்சியில்  "செவிக்கு உணவு இல்லாத பொழுது "  என்ற தலைப்பில்  கலந்துரையாடல்   நிகழ்வு 28.09.2024   சனிக்கிழமை காலை  11.00 மணியளவில்  தரைத்தளத்தில் உள்ள பல்வகைப்  பயன்பாட்டு அரங்கத்தில்  நடைபெற உள்ளது . இந்நிகழ்வில் மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



"இளையோர் களம்" 27/09/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

 அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று  வெள்ளிக்கிழமை (27/09/2024)  மாலை 4.30 மணிக்கு இளையோர் களம் என்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள்  கலந்து கொண்டு  சொற்பொழிவு, பாட்டு  என  பல தலைப்புகளில் பங்கேற்று  தங்களது படைப்புகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி. 

                              




                                          


                                    

குழந்தைகள் நிகழ்ச்சி -"வண்ண ஜாலம்"- திரு. சரவணன்-29.09.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (29. 09.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு  திரு .சரவணன் அவர்களின் "வண்ண ஜாலம்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில்  திரு .சரவணன்   அவர்கள்  குழந்தைகளை வயது வாரியாக  பிரித்து  ஆயில் பேஸ்டல் (Oil Pastels) பயன்படுத்தி  ஓவியம்  வரைவது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன்  கற்றுக்கொடுத்தார்.இந்த நிகழ்வு  குழந்தைகளின்  கற்பனை  திறன்கள் மற்றும்  கலை திறன்களைப் வெளிப்படுத்தும் வாய்ப்பாக  அமைந்தது .குழந்தைகளும்   அதிக ஆர்வத்தோடு பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.









"RADICAL" பெரியவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (29.09.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு "RADICAL" என்ற பெரியவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்!

“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 29.09.2024 , 10.30 AM

கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை.   “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி, (29.09.2024 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில்  நடைபெற்றது . இந்நிகழ்வில் குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை  சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து  நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு    பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள்  வழங்கப்பட்டது . பங்குபெற்ற அனைவருக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்  ...




CHESS @ KCL" - சதுரங்க பயிற்சி | சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (28.09.2024 ) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு. உமாசங்கர் அவர்களின் "CHESS @ KCL" என்ற சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சியின் பதினான்காவது  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . திரு. உமாசங்கர் அவர்கள் சதுரங்கத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் சிறந்த நுணுக்கங்களை மிக தெளிவாக எளிய செயல்விளக்கங்களுடன் சிறுவர்களுக்கு சதுரங்கம் கற்றுக்கொடுத்தார் . நிகழ்வின் இறுதியில் விருப்பமுள்ள குழந்தைகள் திரு. உமாசங்கர் அவர்களுடன் சதுரங்கம் விளையாடினார்கள் . குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பயன்பெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . நன்றி ...






"Quackerz" சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 28.09.2024, 4 PM

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (28.09.2024 )சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான "Quackerz" என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர், அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி ...







KCL Expresso: “Content, Communication, Cognition, and Culture" Mrs.L.Hemalatha, Assistant Professor, Department of English, The American College, Madurai, 26.09.2024 மாலை 5.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 26.09.2024 வியாழக்கிழமை அன்றுContent, Communication, Cognition, and Culture: The 4Cs framework in learning English Mrs.L.Hemalatha, Assistant Professor, Department of English, The American College, Madurai அவர்களின் உரையானது பல்வகை பண்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு  நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள்  தங்கள் பெயரினை https://tinyurl.com/6z3jyvjy லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்


Workshop on Critical Thinking in the Digital Age: A Media Literacy Workshop (27.09.2024 முதல் 30.09.2024)

கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் நடைபெற்றுவரும் தொடர் நிகழ்வுகளின் வரிசையில் (27.09.2024 முதல் 30.09.2024) வரை  திரு. K .இளங்கோ சாமுவேல் பீட்டர் அவர்களின் " Critical Thinking in the Digital Age: A Media Literacy Workshop "  என்ற பயிலரங்கு  நடைபெறவுள்ளது. இப்பயிலரங்கில் பல்வேறு ஊடகங்கள் வழியே பகிரப்படும் தகவல்களை பகுத்தாயவும், மதிப்பீடு செய்யவும்,  திறம்பட  பயன்படுத்துவது குறித்த நுணுக்கங்கள் மற்றும் முழுமையான பயிற்சியும்  அளிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் ஆகவே முன்பதிவு அவசியம்.  இதில் பங்கு பெறும் பங்கேற்பாளர்களுக்கு  பயிற்சியின் இறுதியில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே  விருப்பமுடையவர்கள்  இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அனுமதி இலவசம்!  நன்றி ...

முன்பதிவிற்கு :- https://tinyurl.com/Media-Literacy-Workshop

குறிப்பு :-  வயது (age ) 10 முதல் 20 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள். 

*முன்பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த பயிற்சி பட்டறையில்   கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

*இந்த பயிற்சி பட்டறையில்   நான்கு நாட்களும் கலந்துகொள்ளும் நபர்களுக்கு மட்டும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும்  என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் .

Objective: - To equip participants with the skills to critically evaluate and effectively utilize various forms of media.

Agenda:-

Day 1: - Overview of the workshop objectives

Introduction to media literacy and its importance

Understanding the influence of digital communication

Types of media (traditional, print, digital, social)

Day 2: -Critical Thinking and Analysis

Focus on producing print media messages

Analyzing print media messages

Day 3:- Critical thinking challenge

Focus on producing creative audio messages

Day 4:-  Creating Media Literate Content

Focus on producing positive video messages

Best practices for creating credible content



முத்தமிழ் முற்றம் 25.09.2024 புதன்கிழமை மாலை 5.00 மணி "என்னை செதுக்கிய நூல் திருக்குறள்"

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக “25.09.2024" புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "என்னை செதுக்கிய நூல் திருக்குறள்" என்ற தலைப்பில் திரு. கா. கருப்பையா (துணை ஆட்சியர் - பணிநிறைவு) (தலைவர்- உலக திருக்குறள் பேரவை –மதுரை), அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 



                              



"MINARI" பெரியவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (22.09.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு "MINARI" என்ற பெரியவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்!



"Adam Sandler is Leo" சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 21.09.2024, 4 PM

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (21.09.2024 )சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான "Adam Sandler is Leo" என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர், அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி ...





" முத்தமிழ் முற்றம் " (மொழி பெயர்ப்பு நூல்கள் - குழு கலந்துரையாடல்) | 22.09.2024 22.09.2024 ஞாயிற்று கிழமை மாலை 5.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “முத்தமிழ் முற்றம்” நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 22.09.2024" ஞாயிறு   மாலை 5.00  மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "மொழிபெயர்ப்பு நூல்கள்” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடலில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.



" யாதுமாகி நின்றாய் சக்தி " திரு .குமசேரன் சிவசங்கரன் - | 21.09.2024 மாலை 5.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை தோறும் நடைபெறும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியான “யாதுமாகி நின்றாய் சக்தி” எனும் மாதாந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (21.09.2024) சனிக்கிழமை இன்று திரு. குமரேசன் சிவசங்கரன் அவர்களின் “வணிகத்தில் மகளிர்” என்ற நிகழ்வில் மகளிர் வணிகம் பற்றியும் மகளிர் வணிகம் தொடங்க அரசின் மானியம் மற்றும் கடன் உதவி பற்றிய விழிப்புணர்வையும், ஆலோசனைகளையும் வழங்கியதோடு பெண்களின் முன்னேற்றதின் அவசியம் குறித்தும் பல தகவல்களை பரிமாறினார் என்பதை இங்கு மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.






இளையோர் களம் - 20-09/-2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (20.09.2024) வெள்ளிக்கிழமை  இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள பல்வகை பயன்பாட்டு அரங்கில் கல்லூரி  மாணவ/மாணவிகளுக்கான "இளையோர் களம்",  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி  மாணவ/மாணவிகள் அனைவரும் பங்கேற்று தங்கள் திறமைகளை (சொற்பொழிவு , நூல் விமர்சனம், கவிதை ) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி



"கதையோடு விளையாடு" - திரு. ராம்போ குமார்| 22.09.2024, 11 AM

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (22.09.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு.  ராம்போ குமார் அவர்களின்   அவர்களின்   "கதையோடு விளையாடு"  என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில்  திரு ராம்போ குமார்  அவர்கள் , கதையோடு  பல்வேறு  விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இந்நிகழ்வு குழந்தைகளுக்கு விளையாட்டில் குழு ஒற்றுமை,கூட்டு முயற்சி ,மனஒருமைப்பாடு ஆகியவற்றை விளையாட்டின்மூலம் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக  அமைந்தது. குழந்தைகளும்   அதிக ஆர்வத்தோடு பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.