• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

யாதுமாகி நின்றாய் சக்தி "அறிவாற்றலின் பெட்டகம் பெண்" 21/02/26 சனிக்கிழமை மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை

அனைவருக்கும் வணக்கம்  !
நமது கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவ து சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் அறிவாற்றலின் பெட்டகம் பெண் என்ற தலைப்பில்  இந்த மாதம்  21/02/26 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை S.V.ரேணுகாதேவி 
(எழுத்தாளர் யுகா) -மேனாள் முதன்மையர் தலைவர். ஆங்கிலத்துறை E.M.G யாதவர் மகளிர் கல்லூரி மதுரை  அவர்கள் உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

 அனுமதி இலவசம் !



KCL Expresso "Intelligence Speaks": "Performing Under Pressure: Skills No One Taught You" (19.02.2026) வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு

அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 19.02.2026 வியாழக்கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்  "Performing Under Pressure: Skills No One Taught You" என்ற தலைப்பில்   Dr. Gautami, MD (Psy), DNB, Consultant Psychiatrist, Ahana Hospital. அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது   பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00  மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள  முன்பதிவு செய்வதற்கு  அன்புடன் அழைக்கின்றோம்.   

https://tinyurl.com/bdeu8x7b



SVN கல்லூரி மற்றும் M.N.U. ஜெயராஜ் நாடார் பள்ளி இணைந்து “READATHON 2026” நிகழ்ச்சி 16.2.2026 முதல் 21.2.2026 வரை காலை 10.30 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம். 

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், SVN கல்லூரி மற்றும் M.N.U. ஜெயராஜ் நாடார் பள்ளி இணைந்து, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “READATHON 2026” நிகழ்ச்சி 16.2.2026 முதல் 21.2.2026 வரை நடத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்களின் வாசிப்பு திறன், சிந்தனை திறன் மற்றும் நூலகப் பயன்பாடு மேம்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.



Popular science lecture on "வலுவான பற்கள் மகிழ்ச்சியான நாம் ” (20.02.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு

அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (20.02.2026) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு  Popular science lecture:30 " வலுவான பற்கள் மகிழ்ச்சியான நாம் ” என்னும் தலைப்பில் முனைவர்.க.கண்ணன் , உதவிப் பேராசிரியர், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை,அமெரிக்கன் கல்லூரி , மதுரை., அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய வாசகர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்! நன்றி ...

முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1



“நூல் அரும்புகள்" 15.02.2026 ஞாயிறு காலை 10.30 மணி

 அனைவருக்கும் வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (15.02.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில்,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . நன்றி...

அனைவரும் வருக !, அனுமதி இலவசம் ! 



“குழந்தைகளுக்கான களியலாட்டம் பயிற்சி” 15.02.2026 ஞாயிறு காலை 11.00 மணி

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும்,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. 

அதன்படி (15.02.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு மு.ஆர்த்தி (நாட்டுப்புற கலைஞர்) அவர்கள் வழங்கும் “குழந்தைகளுக்கான களியலாட்டம் பயிற்சி” எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  நன்றி...,அனைவரும் வருக! அனுமதி இலவசம்!. 


இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids

குறிப்பு :- இந்நிகழ்விற்கு  வரும் குழந்தைகள் வரும்பொழுது இரண்டு சிறிய கோல்கள் (கம்பு),(two thicker stick) கொண்டுவரவும் 



"முத்தமிழ் முற்றம்" 19.02.2026 வியாழக்கிழமை மாலை 5-6 "வாசிப்பு உலகம்"

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "முத்தமிழ் முற்றம்" நிகழ்வில் 19.02.2026 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "வாசிப்பு உலகம்" என்னும் தலைப்பில் முனைவர் சே.முனியசாமி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.