• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Diffrently Abled Section : Conveniently located at the Ground floor, the Diffrently Abled Section has 1000 printed books in Braille format, audio books etc. Four numbers of wheel chairs are available at the section for the use of Differently Abled users.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 23.03.2025 (10.30 AM)

 வணக்கம்,

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (23.03.2025 ) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,கீழ்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . அனுமதி இலவசம் ! நன்றி 



குழந்தைகள் நிகழ்ச்சி - " பலூன் சிற்பங்கள் வடிவமைத்தல் பயிற்சி" திரு. T. பிரகதீஸ்வரன் (Balloon Sculpture artist ) | (23.03.2025) காலை 11.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (23.03.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. T. பிரகதீஸ்வரன்(Balloon Sculpture artist ), அவர்களின் "பலூன் சிற்பங்கள் வடிவமைத்தல் பயிற்சி" என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ...அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids





" Two Tails " என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 22.03.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்(22.03.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "Two Tails" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். நன்றி...அனுமதி இலவசம்!. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.


முன்பதிவுக்கு ::http://tinyurl.com/kcltheatre




"முத்தமிழ் முற்றம்" 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு -“பெண்மையைப் போற்றும் வள்ளுவம்” என்ற தலைப்பில் தமிழாசிரியர் திரு .வி. கார்த்திக் அவர்கள் சிறப்புரை நிகழ்ச்சி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று "21.03.2025" வெள்ளிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “பெண்மையை போற்றும் வள்ளுவம்”  என்ற தலைப்பில் தமிழாசிரியர் திரு வி. கார்த்திக் M.A., M.Phil., B. Ed   அவர்கள் திருக்குறள் காட்டும் பெண்மை உயர்ந்தது, உன்னதமானது, தன்னையும் உயர்த்திக் கொண்டு, தன்னைச் சார்ந்தவர்களையும், உலகையும் உயர்த்தக் கூடியதாக விளங்குகின்றது என்பது போன்ற கருத்துக்களை எளிய நடையிலும் பெண்மையை போற்றும் சில குறள்களை  மேற்கோள்காட்டியும்  சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.





சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 16/03/2025 - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை

அனைவருக்கும் வணக்கம் நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம்தொடு என்ற நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் இன்று  Aptitude for all competitiive exam தலைப்பில் திரு தனசேகரன் பஞ்சவர்ணம் அவர்கள் Aptitude பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான போட்டித் தேர்வு  மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பதை  இங்கு தெரியப்படுத்துகின்றோம் நன்றி






"The SpongeBob Movie: Sponge on the Run" சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 15.03.2025, 4 PM நடைபெற்றது

 வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (15.03.2025 )சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிறுவர்களுக்கான "The SpongeBob Movie: Sponge on the Run" என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர்,அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது, பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி .







கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்தி TNPSC, SSC தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் VFX 3D Designer பயிற்சி பெற்றவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பயன்படுத்தி போட்டித் தேர்வு ஆர்வலர்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பயன்படுத்தி, சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் நடத்திய உதவி பொறியாளர் தேர்வில் 1 நபரும், TNPSC குரூப் 4 தேர்வில் 22 நபர்களும்,  SSC CGL தேர்வில் ஒரு நபரும், SSC MTS  தேர்வில் ஒரு நபரும்  வெற்றி பெற்றுள்ளார்கள். மேலும்,  பொது நூலக இயக்ககத்தின் முன்னெடுப்பில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினால்  ஆறுமாதகால VFX 3D Design தொழிற் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த தொழிற்பயிற்சிக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் 162 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 35 மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு,  16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களில் இரண்டு நபர்கள் சொந்தமாக  VFX 3D Design தொழில் தொடங்கியுள்ளார்கள் மற்றும் இரண்டு நபர்கள் தனியார் நிறுவனத்தில் VFX 3D Designer ஆக பணியில் சேர்ந்துள்ளார்கள். 

மேற்படி, TNPSC, SSC தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் நடத்திய VFX 3D Design தொழிற் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி  15.03.2025 அன்று காலை 10.00 மணிக்கு  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பல்வகைப் பயன்பாட்டு அரங்கில் நடைபெற்றது. 

நிகழ்வில் மரியாதைக்குரிய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை  வழங்கி,  TNPSC, SSC தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினால் நடத்தப்பட்ட ஆறுமாதகால VFX 3D Design பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்கள்.  இந்நிகழ்வில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர். வே.தினேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார், முனைவர். ஜெ. ஜெபஜோஸ்லின் அறிமுகவுரை ஆற்றினார் மற்றும் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் திரு.வெ.சந்தான கிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.  நிகழ்வில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் நூலகர்கள், போட்டித் தேர்வு ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துகொண்டனர்.