• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

“நூல் அரும்புகள்” (15.03.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (15.03.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில்,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . நன்றி...

அனைவரும் வருக !, அனுமதி இலவசம் ! .




சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் " Aptitude for All Competitive Exams: RATIO AND PROPORTION" 14/03/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரை

 அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்

Aptitude For All Competitive Exams:  RATIO AND PROPORTION என்ற தலைப்பில் 

திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Sourthern Railway Madurai Division) அவர்கள்

14/03/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரைபயிற்சி அளிக்க உள்ளார் 

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

அனுமதி இலவசம்

முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu



சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் தமிழ் இலக்கணம் (11/03/26) புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 1 மணி வரை

 

அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்   தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில் 

M. SARANYA அவர்கள் 11/03/26 இன்று காலை 10.30 மணி முதல் 1 மணி வரைபயிற்சி அளித்தார்

நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு: https://www.facebook.com/share/p/1CQthdpXPJ/





“ கல்லூரி மாணவிகளுக்கான வாசிப்பு திருவிழா” (READATHON 2026 ) (நூல் விமர்சனம்) 13.03.2026 வெள்ளி காலை 11 மணி

 மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மங்கயற்கரசி கலை &அறிவியல் மகளிர் கல்லூரி  இணைந்து கல்லூரி மாணவிகள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 13.03.2026 வெள்ளி காலை 11 மணிக்கு “READATHON 2026”( நூல் விமர்சனம்) நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி மூலம் மாணவிகளின் வாசிப்பு, சிந்தனை திறன் மற்றும் நூலகப் பயன்பாடு மேம்படும் விதமாக, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின்  பல்வகை பயன்பாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்பதை  தெரிவித்துக் கொள்கிறோம்


சிகரம் தொடு "தமிழ் இலக்கணம்" (11/03/26) புதன்கிழமை,(12/03/26)வியாழக்கிழமை,(13/03/26) வெள்ளிக்கிழமை,(16/03/26) திங்கள் கிழமை,(17/03/26)செவ்வாய்க்கிழமை,(18/03/26) புதன்கிழமை ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் 1 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில் M. SARANYA அவர்கள்

11/03/26   புதன்கிழமை  12/03/26 வியாழக்கிழமை

13/03/26 வெள்ளிக்கிழமை 16/03/26 திங்கள் கிழமை

17/03/26 செவ்வாய்க்கிழமை 18/03/26 புதன்கிழமை  ஆகிய தேதிகளில்

 காலை 10.30 மணி முதல் 1 மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார் 

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

அனுமதி இலவசம்

முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu



“அந்துவனும் ஆதனும்” (வரலாறு சார்ந்த கதையாடல்கள்)(15.03.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும்,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. 

அதன்படி (15.03.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு.அந்துவன் கபிரியேல் (கலைடாஸ்கோப்) அவர்கள் வழங்கும் “அந்துவனும் ஆதனும்” (வரலாறு சார்ந்த கதையாடல்கள்) எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  நன்றி...,அனைவரும் வருக! அனுமதி இலவசம்!. 

இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids



"Abacus@KCL" (14.03.2026) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்புகள்  நடைபெற்றுவருகின்றது . அந்த வகையில் (14.03.2026) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 23வது "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி ... 

குறிப்பு :-

 1. வயது (age ) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.

2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் 

3.இந்நிகழ்விற்கு வரும்பொழுது குறிப்பேடு ,பென்சில் ,அழிப்பான் மற்றும் "எண்சட்டக் கருவி"(Abacus Kit ) வைத்திருப்பவர்கள் கொண்டுவரவும். 

இந்த வார அபாகஸ் நிகழ்வு முன்பதிவிற்கு : https://tinyurl.com/Abacus-at-KCL