• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் From Silence to Confidence. Spoken English Training & Crack Exams with Strong English Grammar Level II 22/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணி

 அனைவருக்கும் வணக்கம் !


நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் இன்றுடன் ஆங்கில பயிற்சி நிறைவு பெற்ற நிலையில் 

From Silence to Confidence. Spoken English Training (21/02/26     முதல் 07/03/26 வரை ) AND Crack Exams with Strong English Grammar Level II (14/03/26 to 22/03/26 )ஆகிய தேதிகளில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 22/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணிக்கு   Mrs. Shanthi Ramoharan, Μ.Α., M.Ed., M.Phil.,Mahatma School Baba Building Principal அவர்கள் இந்த பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி ஊக்கம் அளித்தார் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு:https://www.facebook.com/share/p/1TVPnCz4Yd/



 

"இன்று " நிகழ்ச்சியில் "உலக தண்ணீர் தினத்தை"முன்னிட்டு 22.03.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 வரை

 மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் " இன்று " எனும் சிறப்பு நிகழ்வில் உலக தண்ணீர் தினம் என்னும் தலைப்பில் திருமதி இரா. கீதா மணி அவர்கள் இன்று 22.03.2026 ஞாயிற்றுக்கிழமை  சிறப்புரையாற்றினார். நீர் ஆதாரங்களை பாதுகாத்தல் , மேம்படுத்துதல், மற்றும் வலுப்படுத்துதல் பற்றியும், இந்த ஆண்டு க்கான தண்ணீரின் கருப்பொருள் பற்றியும், மேலும் தண்ணீர் பற்றிய பல்வேறு சுவையான தகவல்கள் தந்து சிறப்புரையாற்றினார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் .


குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் “குழந்தைகளே! உங்கள் விழிகளைக் காக்க விழித்திடுவீர்” (22.03.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று   (22.03.2026 ) ஞாயிறு  காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு  Dr.P. Sundaresan, ICMR  Emeritus scientist,

Molecular Genetics, Aravind Medical Research Foundation, Madurai.அவர்கள் வழங்கும் “குழந்தைகளே! உங்கள் விழிகளைக் காக்க விழித்திடுவீர்" எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் விஞ்ஞானி முனைவர் P .சுந்தரேசன்  அவர்கள், பரம்பரை கண் நோய், பார்வை குறைபாடுகள், கண்ணாடி மூலம் சரி செய்வது, பார்வை இழப்பின் முக்கிய காரணங்கள், கண்புரை நோய்,கண்ணில் நீர்  வடிதல், கண்  அழுத்தம்,  நோய் அறிகுறிகளும் பாதுகாப்பும் ,உணவு பழகக்கவழக்கம் குறித்தும் எளிய முறையில் விளக்கக்காட்சி வாயிலாக குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்கள் , மேலும்  குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கும் சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார் . இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு :https://www.facebook.com/share/p/1CJJJPWMjv/



"நமது நலம்" - நாளும் நலம்! நலமே பலம்!" - "பெண்களின் ஹார்மோன் சமநிலைக்கு இயற்கை மருத்துவத்தின் பங்கு" 24.03.2026 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி

 "நமது நலம்"  நாளும் நலம்! நலமே பலம்! எனும் நிகழ்வு 24.03.2026 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. அனைவருக்கும் வணக்கம். மதுரைக்  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நமது நலம்" நாளும் நலம்! நலமே பலம்! - எனும் நிகழ்வு 24.03.2026 செவ்வாய்க் கிழமை மாலை 4.00  மணிக்கு தரைத் தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் "பெண்களின் ஹார்மோன் சமநிலைக்கு இயற்கை மருத்துவத்தின் பங்கு " - எனும் தலைப்பில் மதுரை அரசு  இராஜாஜி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்  M. நாகராணி நாச்சியார் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்துகொண்டு பயனைடைய கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம்! நன்றி.



"எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவலைகள்" (23.03.2026) திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம் !

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவலைகள்" என்ற தலைப்பில் முனைவர். சண்முக திருக்குமரன் அவர்கள் 23.03.2026, திங்கட்கிழமை அன்று ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப்பிரிவில் சிறப்புரையாற்ற உள்ளார். 

இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 

நன்றி!


Popular science lecture on " மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள் ” (20.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (20/03/2026) மாலை 5.00 மணியளவில் நடத்திய 32வது   Popular science lecture on "மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள் ” என்னும் தலைப்பில் முனைவர்.கௌரி பிரியா சிதம்பரநாதன்,விஞ்ஞானி,நோயெதிர்ப்பு மற்றும் ஸ்டெம் செல் உயிரியல் துறை ,அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை, மதுரை .,அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் முனைவர்.கௌரி பிரியா  

 அவர்கள் குருத்தணுக்கள்,குருத்தணுக்கள் பிரிவு மற்றும் வேறுபாடு,திறன் அடிப்படையில் குருத்தணுக்களின் வகைகள்,குருத்தணுக்களை அடையாளம் காணல் ,குருத்தணுக்களின் உயர் பெருக்க திறன்,மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள்,முதிர்ந்த குருத்தணுக்கள்,Limbal Epithelial Stem Cells குறித்தும் எளிய விளக்கக்காட்சி வாயிலாக எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் பங்குபெற்றவர்களின் கேள்விகளுக்கு சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார் . இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி ...


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு: https://photos.app.goo.gl/xV794hnB3nkmzqEN7

இந்நிகழ்வின் பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி :https://docs.google.com/presentation/d/1n7KydlXoRFYkZFAqQgoo_95awPjzhgPF/edit?usp=sharing&ouid=102497143834574691207&rtpof=true&sd=true


சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் From Silence to Confidence. Spoken English Training & Crack Exams with Strong English Grammar Level II 22/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணி

 From Silence to Confidence. Spoken English Training(21/02/26     முதல் 07/03/26 வரை ) AND Crack Exams with Strong English Grammar Level II (14/03/26 to 22/03/26 ) இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 22/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணிக்கு சான்றிதழ் வழங்கப்படும்