• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

“நூல் அரும்புகள்” (15.03.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு



 அனைவருக்கும் வணக்கம்!,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மேடையில் பேசும் வாய்ப்புகளைக் கொடுத்து, மேடையில் பேசும் போது ஏற்படும் கூச்சத்தை போக்கும் வகையிலும் வாரம்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.30 மணிக்கு குழந்தைகளுக்கான "நூல் அரும்புகள்" என்ற நூல் விமர்சனம் நிகழ்வு குழந்தைகள் பிரிவில் நடத்தப்பட்டு வருகிறது .

அதன் ஒரு பகுதியாக (15.03.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நடைபெறும். நிகழ்ச்சிக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது . அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதை படித்துவிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் பங்கு பெறலாம் (ஒரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக 5 சிறார்கள், ஒருவருக்கு ஐந்து நிமிடம்).முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இதில் பங்கு பெறும் சிறார்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். அனுமதி இலவசம் ! நன்றி...


முன்பதிவிற்கு :  https://tinyurl.com/KCL-Kids-Nool-Arumbukal




யாதுமாகி நின்றாய் சக்தி "பெண் வலிமை உலகின் பெருமை" 08/03/26 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை

அனைவருக்கும் வணக்கம்!


 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சர்வதேச மகளிர் தின 08/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு பெண்கள் தனது தனித் திறமைகளை மேடையில் அரங்கேற்றினர் பெண்களுக்கு என்றும் பக்கபலமாய் அண்ணனாக, தகப்பனாக, கணவனாக, மகனாக  வாழ்வில் ஆண்கள் எப்போதும் இருப்பதுண்டு அது போலவே இந்த நிகழ்ச்சியிலும் ஆண்கள் பலர் கலந்து கொண்டு தனது கர ஓசைகள் மூலம் பெண்களுக்கு உற்சாகம் அளித்து இந்நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.  இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்களது நன்றி.

 நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு:


https://www.facebook.com/share/p/1HoDnfYPyo/



குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் “மதுபானி கலை மற்றும் வண்ணம் தீட்டுதல்” (08.03.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று   (08.03.2026 ) ஞாயிறு  காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு.அச்சுதன் ரவி,(கலைஞர் & கலை ஆசிரியர்) அவர்கள் வழங்கும் “மதுபானி கலை மற்றும் வண்ணம் தீட்டுதல்” எனும்  குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருமிகு.அச்சுதன் ரவி அவர்கள், மேற்கத்திய மற்றும் இந்திய நாட்டுப்புறக் ஓவியங்கள் குறித்து அறிமுகம். மதுபானி கலை பற்றிய சுருக்கமான வரலாறு.  ஓவியங்கள் வரைவது, வண்ணக் கோட்பாடு மற்றும் அக்ரிலிக் வண்ணங்களைக் கலந்து வைப்பது குறித்து எளிய முறையில் பயிற்சி அளித்தார்  இந்நிகழ்வானது குழந்தைகளின் கற்பனை  சிந்தனைகளை மெருகேற்றும் விதமாக அமைந்தது. இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..



இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/1CCc4QaQaz




குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கான திரைப்படம்,அபாகஸ் பயிற்சி ,சதுரங்க அடிப்படை பயிற்சி (07.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று 

(07.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "Spirit: Stallion of the Cimarron"  என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது , அதனை தொடர்ந்து  மாலை 5.30 மணிக்கு  திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி  அவர்களின் 22வது  "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு மற்றும் திரு . ராபின் ராஜகாந்தன் அவர்களின் 72வது   "Chess@KCL" என்ற சதுரங்க அடிப்படை பயிற்சி (Chess For Beginners )  வகுப்பும்  சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி..



இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/18GCQ8wDrG



Popular science lecture on " மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள் ” (20.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (20.03.2026) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு  Popular science lecture:32" மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள் ” என்னும் தலைப்பில் முனைவர்.கௌரி பிரியா சிதம்பரநாதன்,விஞ்ஞானி,நோயெதிர்ப்பு மற்றும் ஸ்டெம் செல் உயிரியல் துறை ,அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை, மதுரை .,அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய வாசகர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்!,  நன்றி ...


முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1



யாதுமாகி நின்றாய் சக்தி "பெண் வலிமை உலகின் பெருமை" 08/03/26 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம்! 


யாதுமாகி நின்றாய் சக்தி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நாளை பெண்கள் தனது சிறப்பு திறமைகளை  அரங்கேற்ற இருக்கிறார்கள்.   இந்நிகழ்ச்சியானது மார்ச் 8ம் தேதி நாளை  ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தரைத் தளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் நடைபெற இருக்கின்றது இதனை காண விரும்பும் வாசக பெருமக்கள் மற்றும் பொதுமக்கள்  வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்!! அனுமதி இலவசம்



Popular science lecture on " மனித விண்வெளிப் பயணத் திட்டம் ” (06.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (06/03/2026) மாலை 5.00 மணியளவில் நடத்திய 31வது   Popular science lecture on  " மனித விண்வெளி பயணத்திட்டம்..” என்னும் தலைப்பில் முனைவர்.ரா.வெங்கடராமன் ,புகழ்பெற்ற ஓய்வுபெற்ற விஞ்ஞானி மற்றும் முன்னாள் இணை இயக்குநர்(ISRO), சதீஷ் தவான் விண்வெளி மையம்,.ஸ்ரீஹரிகோட்டா. 

அவர்கள்  சிறப்புரையாற்றினார். இவர்  தனது உரையில், இந்தியாவின் கனவுத் திட்டமான 'ககன்யான்' (Gaganyaan) மிஷன் குறித்து மிக விரிவான விளக்கங்களை வழங்கினார். குறிப்பாக, விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு கவசமான 'க்ரூ மாடியூல்' (Crew Module), அவசர காலங்களில் வீரர்களைக் காக்கும் 'க்ரூ எஸ்கேப் சிஸ்டம்' (Crew Escape System), மற்றும் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனைகள் (Integrated Air Drop Test) குறித்து எளிய முறையில் விளக்கினார்.மேலும், விண்வெளி வீரர்களுக்கான சிறப்பு உடைகள், துணை அமைப்புகள், ககன்யான் கட்டுப்பாட்டு மையம் மற்றும் விண்கலத்தை மீட்கும் நடைமுறைகள் (Recovery Plan) குறித்தும் 

எளிய விளக்கக்காட்சி வாயிலாக எடுத்துரைத்தார். அவரது விளக்கங்கள் அனைவருக்கும் புதிய புரிதலை ஏற்படுத்தின. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் அவர் சிறப்பாக விளக்கமளித்தார். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி

 ...

இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு :https://photos.app.goo.gl/Rwi2UW2FG3r3rVH3A