• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கான திரைப்படம்,அபாகஸ் பயிற்சி,சதுரங்க பயிற்சி (14.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று 

(14.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "The Myth of  Maracuda"  என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது , அதனை தொடர்ந்து  மாலை 5.30 மணிக்கு  திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி  அவர்களின் 23வது  "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு மற்றும் திரு .எஸ் .உமாசங்கர்  அவர்களின் 73வது  "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate) பயிற்சி வகுப்பும்  சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி..


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு:https://www.facebook.com/share/p/1ArUNPpHH6/




சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் " Aptitude for All Competitive Exams: RATIO AND PROPORTION" 14/03/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரை

 அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டித்தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்

Aptitude For All Competitive Exams:  RATIO AND PROPORTIONஎன்ற தலைப்பில் 

திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Sourthern Railway Madurai  Division)அவர்கள்

14/03/ 26 சனிக்கிழமை இன்று காலை 10.30 மணி முதல் 1.30 வரைபயிற்சி அளித்தார்

புகைப்படத் தொகுப்பு: https://www.facebook.com/share/p/1N8pkkphmb/





“ கல்லூரி மாணவிகளுக்கான வாசிப்பு திருவிழா” (READATHON 2026 ) (நூல் விமர்சனம்) 13.03.2026 வெள்ளி காலை 11 மணி

 மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மங்கையர்க்கரசி கலை & அறிவியல் மகளிர் கல்லூரி  இணைந்து "READATHON" என்னும் சிறப்பு நிகழ்ச்சி இன்று  13.03.2026 ,வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சி மாணவிகளுக்கு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த நூல் விமர்சனம் போட்டி நடைபெற்றது . பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது இந்நிகழ்வு  அறிவை விரிவுபடுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



சிறுவர்களுக்கான திரைப்படம் "The Myth of Maracuda" (14.03.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை விரிவுபடுத்துகின்ற வாய்ப்பாகவும் , உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும் ,குழைந்தைகளுக்கான திரைப்படம் திரையிடுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு அமைகின்றது.அந்த வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறார் திரைப்படங்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த வாரம் (14.03.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "The Myth of  Maracuda"  என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். அனுமதி இலவசம்!. நன்றி... 

முன்பதிவுக்கு :http://tinyurl.com/kcltheatre



KCL Expresso "Intelligence Speaks": "வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகள்" (19.03.2026) வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!  நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 19.03.2026 வியாழக்கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்  "வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகள்" என்ற தலைப்பில் திருமதி மா.கோமதி MA M Phil B Ed DGT ,தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், இ மா கோ யாதவர் மகளிர் கல்லூரி,மதுரை  அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது   பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00  மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள  முன்பதிவு செய்வதற்கு  அன்புடன் அழைக்கின்றோம்.  https://tinyurl.com/bdeu8x7b



"முத்தமிழ் முற்றம்"-"இலக்கியமும் வாழ்வியலும்" (12.03.2026) வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற "முத்தமிழ் முற்றம்  " நிகழ்ச்சியில் "  12.03.2026,  வியாழக்கிழமை   மாலை  "இலக்கியமும் வாழ்வியலும்" என்ற தலைப்பில் திரு.ச.திருநாவுக்கரசு அவர்கள் இலக்கியம் மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு பெரும் செல்வமாகும் என மிகவும் அழகாகவும் நகைச்சுவையுடனும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்று  சிறப்பித்த அனைத்து வாசகர்களுக்கும்   எங்களது மனமார்ந்த நன்றிகள்.


“நூல் அரும்புகள்” (15.03.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (15.03.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில்,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . நன்றி...

அனைவரும் வருக !, அனுமதி இலவசம் ! .