• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

“நூல் அரும்புகள்” (01.03.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மேடையில் பேசும் வாய்ப்புகளைக் கொடுத்து, மேடையில் பேசும் போது ஏற்படும் கூச்சத்தை போக்கும் வகையிலும் வாரம்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.30 மணிக்கு குழந்தைகளுக்கான "நூல் அரும்புகள்" என்ற நூல் விமர்சனம் நிகழ்வு குழந்தைகள் பிரிவில் நடத்தப்பட்டு வருகிறது .

அதன் ஒரு பகுதியாக (01.03.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நடைபெறும். நிகழ்ச்சிக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது . அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதை படித்துவிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் பங்கு பெறலாம் (ஒரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக 5 சிறார்கள், ஒருவருக்கு ஐந்து நிமிடம்).முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இதில் பங்கு பெறும் சிறார்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். அனுமதி இலவசம் ! நன்றி...

முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-Kids-Nool-Arumbukal





"Chess@KCL" சதுரங்க இடைநிலை பயிற்சி (Chess for intermediate) 28.02.2026 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

 வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்  குழந்தைகளின் மூளைக்கு சிறந்த பயிற்சி மற்றும்  நினைவாற்றலை   அதிகரிக்கும் வகையிலும், கவனக்குவிப்பு மற்றும்  விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்  வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி நூலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் (28.02.2026) சனிக்கிழமை அன்று திரு .எஸ் .உமாசங்கர்  அவர்களின் 71வது  "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate) பயிற்சி நடைபெறவுள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி இலவசம்!  நன்றி ... 

முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCLChess





"Abacus@KCL" (28.02.2026) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

 அனைவரும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்புகள்  நடைபெற்றுவருகின்றது . அந்த வகையில் (28.02.2026) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 21வது "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி ... 

குறிப்பு :-

 1. வயது (age ) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.

2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் 

3.இந்நிகழ்விற்கு வரும்பொழுது குறிப்பேடு ,பென்சில் ,அழிப்பான் மற்றும் "எண்சட்டக் கருவி"(Abacus Kit ) வைத்திருப்பவர்கள் கொண்டுவரவும். 

இந்த வார அபாகஸ் நிகழ்வு முன்பதிவிற்கு https://tinyurl.com/Abacus-at-KCL




“பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு திருவிழா” (READATHON 2026 )

 கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை, மதுரை நாடார் மகாஜன சங்கம், ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் மதுரை நாடார் உறவின் முறை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய “பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு திருவிழா” (READATHON 2026 )16.02.2026 முதல் 21.02.2026 வரை சிறப்பாக நடைபெற்றது. பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.இன்றைய நிறைவு விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



"நமது நலம்" - நாளும் நலம்! நலமே பலம்!" - "புற்றுநோயும் இந்திய மருத்துவமும்" 24/02/2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 04.00 மணி

 "நமது நலம்" - நாளும் நலம்! நலமே பலம்!" - "புற்றுநோயும் இந்திய  மருத்துவமும்" 24/02/2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 04.00 மணிக்கு.





“நூல் அரும்புகள்” (22.02.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (22.02.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில்,மேற்கண்ட  பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . நன்றி...

அனைவரும் வருக !, அனுமதி இலவசம் ! 



சிகரம் தொடு " From Silence to Confidence (Spoken English Training)" (21/02/26) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை

அனைவருக்கும் வணக்கம் 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்காக ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சியானது இரண்டு நிலைகளாக நடத்தப்பட உள்ளது முதல் நிலையானது வருகின்ற சனிக்கிழமை அன்று 21/02/26 மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து 22/02/26 ஞாயிற்றுக்கிழமை28/02/26 சனிக்கிழமை 01/03/26 ஞாயிற்றுக்கிழமை 07/03/26 சனிக்கிழமை ஆகிய ஐந்து நாட்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆங்கிலம் பேசும் பயிற்சியினை From Silence to Confidence. (Spoken English Training) என்ற தலைப்பில் Mrs. Shanthi Ramoharan, Μ.Α., M.Ed., M.Phil.,Mahatma School Baba Building Principal அவர்கள் அளிக்க உள்ளார். ஆங்கிலம் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். பயிற்சியில் அனைத்து நாட்களும் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

 அனுமதி இலவசம்.