• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

சிகரம் தொடு "தமிழ் இலக்கணம்" (11/03/26) புதன்கிழமை,(12/03/26)வியாழக்கிழமை,(13/03/26) வெள்ளிக்கிழமை,(16/03/26) திங்கள் கிழமை,(17/03/26)செவ்வாய்க்கிழமை,(18/03/26) புதன்கிழமை ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் 1 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில் M. SARANYA அவர்கள்

11/03/26   புதன்கிழமை  12/03/26 வியாழக்கிழமை

13/03/26 வெள்ளிக்கிழமை 16/03/26 திங்கள் கிழமை

17/03/26 செவ்வாய்க்கிழமை 18/03/26 புதன்கிழமை  ஆகிய தேதிகளில்

 காலை 10.30 மணி முதல் 1 மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார் 

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

அனுமதி இலவசம்

முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu



“அந்துவனும் ஆதனும்” (வரலாறு சார்ந்த கதையாடல்கள்)(15.03.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும்,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. 

அதன்படி (15.03.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு.அந்துவன் கபிரியேல் (கலைடாஸ்கோப்) அவர்கள் வழங்கும் “அந்துவனும் ஆதனும்” (வரலாறு சார்ந்த கதையாடல்கள்) எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  நன்றி...,அனைவரும் வருக! அனுமதி இலவசம்!. 

இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids



"Abacus@KCL" (14.03.2026) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்புகள்  நடைபெற்றுவருகின்றது . அந்த வகையில் (14.03.2026) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 23வது "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி ... 

குறிப்பு :-

 1. வயது (age ) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.

2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் 

3.இந்நிகழ்விற்கு வரும்பொழுது குறிப்பேடு ,பென்சில் ,அழிப்பான் மற்றும் "எண்சட்டக் கருவி"(Abacus Kit ) வைத்திருப்பவர்கள் கொண்டுவரவும். 

இந்த வார அபாகஸ் நிகழ்வு முன்பதிவிற்கு : https://tinyurl.com/Abacus-at-KCL




"Chess@KCL" சதுரங்க இடைநிலை பயிற்சி (Chess for intermediate) 14.03.2026 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

 வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்  குழந்தைகளின் மூளைக்கு சிறந்த பயிற்சி மற்றும்  நினைவாற்றலை   அதிகரிக்கும் வகையிலும், கவனக்குவிப்பு மற்றும்  விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்  வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி நூலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் (14.03.2026) சனிக்கிழமை அன்று திரு .எஸ் .உமாசங்கர்  அவர்களின் 73வது  "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate) பயிற்சி நடைபெறவுள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி இலவசம்!  நன்றி ... 

முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCLChess



“நூல் அரும்புகள்” (15.03.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு



 அனைவருக்கும் வணக்கம்!,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மேடையில் பேசும் வாய்ப்புகளைக் கொடுத்து, மேடையில் பேசும் போது ஏற்படும் கூச்சத்தை போக்கும் வகையிலும் வாரம்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.30 மணிக்கு குழந்தைகளுக்கான "நூல் அரும்புகள்" என்ற நூல் விமர்சனம் நிகழ்வு குழந்தைகள் பிரிவில் நடத்தப்பட்டு வருகிறது .

அதன் ஒரு பகுதியாக (15.03.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நடைபெறும். நிகழ்ச்சிக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது . அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதை படித்துவிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் பங்கு பெறலாம் (ஒரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக 5 சிறார்கள், ஒருவருக்கு ஐந்து நிமிடம்).முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இதில் பங்கு பெறும் சிறார்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். அனுமதி இலவசம் ! நன்றி...


முன்பதிவிற்கு :  https://tinyurl.com/KCL-Kids-Nool-Arumbukal




யாதுமாகி நின்றாய் சக்தி "பெண் வலிமை உலகின் பெருமை" 08/03/26 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை

அனைவருக்கும் வணக்கம்!


 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சர்வதேச மகளிர் தின 08/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு பெண்கள் தனது தனித் திறமைகளை மேடையில் அரங்கேற்றினர் பெண்களுக்கு என்றும் பக்கபலமாய் அண்ணனாக, தகப்பனாக, கணவனாக, மகனாக  வாழ்வில் ஆண்கள் எப்போதும் இருப்பதுண்டு அது போலவே இந்த நிகழ்ச்சியிலும் ஆண்கள் பலர் கலந்து கொண்டு தனது கர ஓசைகள் மூலம் பெண்களுக்கு உற்சாகம் அளித்து இந்நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.  இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்களது நன்றி.

 நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு:


https://www.facebook.com/share/p/1HoDnfYPyo/



குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் “மதுபானி கலை மற்றும் வண்ணம் தீட்டுதல்” (08.03.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று   (08.03.2026 ) ஞாயிறு  காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு.அச்சுதன் ரவி,(கலைஞர் & கலை ஆசிரியர்) அவர்கள் வழங்கும் “மதுபானி கலை மற்றும் வண்ணம் தீட்டுதல்” எனும்  குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருமிகு.அச்சுதன் ரவி அவர்கள், மேற்கத்திய மற்றும் இந்திய நாட்டுப்புறக் ஓவியங்கள் குறித்து அறிமுகம். மதுபானி கலை பற்றிய சுருக்கமான வரலாறு.  ஓவியங்கள் வரைவது, வண்ணக் கோட்பாடு மற்றும் அக்ரிலிக் வண்ணங்களைக் கலந்து வைப்பது குறித்து எளிய முறையில் பயிற்சி அளித்தார்  இந்நிகழ்வானது குழந்தைகளின் கற்பனை  சிந்தனைகளை மெருகேற்றும் விதமாக அமைந்தது. இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..



இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/1CCc4QaQaz