• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Diffrently Abled Section : Conveniently located at the Ground floor, the Diffrently Abled Section has 1000 printed books in Braille format, audio books etc. Four numbers of wheel chairs are available at the section for the use of Differently Abled users.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

சிகரம்தொடு போட்டித் தேர்வு மாணவர்களின் வழிகாட்டி நிகழ்ச்சி - Echoes of English- Speak, write and shine in IELTS நடைபெற்றது

அனைவருக்கும் வணக்கம்! 

இன்று நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியான சிகரம் தொடு நிகழ்ச்சியில்  Echoes of English - Speaks, write and shine in IELTS தலைப்பில் வெளிநாட்டுக் கல்வி அமர்வின் ஒரு பார்வை:இந்தியாவில் வெளிநாட்டுக் கல்வியின் வரலாறு, முதன்மை இடங்கள், பிரபலமான படிப்புகள், உள்நுழைவுகள் விண்ணப்பம் மற்றும் தகுதி, விதிமுறைகள், நாடு சார்ந்த தேர்வு கட்டணம் (2024 இல் செலுத்தப்படும்), உதவித்தொகைகள், செய்யக்கூடாதவை மற்றும் செய்யக்கூடியவை ஆகியவற்றை விளக்கமாக Kanni Arumugam அவர்கள் உரையாற்றினார்.  வாசகர்கள் வந்து கலந்து கொண்டு அவர்களின் சந்தேகங்களை கேள்வியாக எழுப்பினர் அதற்கான விளக்கங்களையும் கேட்டு தெளிந்து கொண்டனர் என்பதை மகிழ்வுடன்  தெரியப்படுத்துகின்றோம்.








“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 02.03.2025 (10.30 AM)

  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று(02.03.2025 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது .









"The Emoji Movie " சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 01.03.2025, 4 PM

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (01.03.2025 )சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிறுவர்களுக்கான "The Emoji Movie " என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர்,அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது, பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி .












சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான வில்லுப்பாட்டு" - திருமதி.ரா.ஞானசுந்தரி , திருமதி. தி.சண்முகப்ரியா மற்றும் குழுவினரின் | 02.03.2025 காலை 11.00 மணி

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் காலை 11.00 மணிக்கு  ஆசிரியர்கள்  திருமதி.ரா.ஞானசுந்தரி , திருமதி. தி.சண்முகப்ரியா மற்றும் குழுவினரின் , 'குழந்தைகளுக்கான வில்லுப்பாட்டு' என்ற  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில், ஆசிரியர்கள்  மற்றும் குழுவினர் பாரம்பரிய  வீர விளையாட்டுக்கள் மற்றும் கலைகளை  குழந்தைகள் அறியும் வண்ணம் வில்லுப்பாட்டுடன் பாடி , விளக்கம் அளித்தனர் . மேலும்  குழந்தைகளைக் குழுக்களாகப் பிரித்து , ஒவ்வொரு குழுவிற்கும் தமிழ் எழுத்துக்களை கொடுத்து , அந்த முதல் எழுத்தில்   தொடங்கும் சொற்களை உருவாக்கும் புதிர் போட்டியும்  நடத்தப்பட்டது.  'காய்கறிகள் வீட்டுக் கல்யாணம்' கதைப்பாடலும் கற்பிக்கப்பட்டது.இந்த நிகழ்வு பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டு பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் .. நன்றி







சிகரம் தொடு போட்டித் தேர்வு

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிகரம் தொடு நிகழ்ச்சியில் தொடர்வரிசையில் இன்று (08/03/25) UPSC   தேர்வுக்கு தமிழ் மொழியில் தயாராவது எப்படி ? என்ற தலைப்பில் திரு காமராஜ் அவர்கள், தான் நேர்முகத் தேர்வுக்கு சென்ற வரையிலான அனுபவங்களையும் மேலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரியப்படுத்துகின்றோம்.







" 9th Popular science lecture on" competitive Exams- Psychological approach " என்னும் தலைப்பில் முனைவர் S.R.சேதுராமன்- (07.03.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு

 வணக்கம்,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை   மற்றும்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை , இணைந்து (07.03.2025) வெள்ளிக்கிழமை அன்று  மாலை  3.00 மணிக்கு " 9th  Popular science lecture on" competitive Exams- Psychological approach " என்னும் தலைப்பில்   முனைவர் S.R.சேதுராமன் , இணை ஒருங்கிணைப்பாளர், மாநில அறிவியல் தொடர்பு குழு ,அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய போட்டித்தேர்வு மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் .  அனுமதி  இலவசம்!, நன்றி ...

முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCL-TNSF1




“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம்

 வணக்கம்,மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று(23.02.2025 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது . 




சிறுவர்களுக்கான "குரலோடு விளையாடு" - என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

 வணக்கம் !

 மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வாக காலை 11.00 மணிக்கு  திரு.இராஜகலைஞன் விஜயராம், ஆசிரியர். அவர்களின் "குரலோடு விளையாடு" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,இந்நிகழ்வில், ஆசிரியர் விஜயராம்அவர்கள்,முதலில் குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இசைக்கு ஏற்ப நடன அசைவுகளை கற்றுக்கொடுத்து ,குரல் இனிமையோடு எவ்வாறு பேசுவது மற்றும் பலகுரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசுவது குறித்து எளிய செயல் விளக்கங்களோடு குழந்தைகளுக்கு  பயிற்சி வழங்கினார் இறுதியில்  "மோட்டு பட்லு" என்ற காணொளியில்  வரும் கதாபாத்திரங்களுக்கு  ஏற்றவகையில் குரல் அமைத்தார்  .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...








"Finding dory" சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது

வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று  (22.02.2025 )சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிறுவர்களுக்கான "Finding Dory " என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர்,அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது, பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி ..











வேர்கள் (அனுபவ பகிர்வு ) 22.02.2025 சனிக்கிழமை காலை 11.00 "முதுமையில் ஆரோக்கியம் காது , மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ கலந்துரையாடல் "

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்னும் தொடர் நிகழ்ச்சியில் "முதுமையில் ஆரோக்கியம் காது , மூக்கு  மற்றும் தொண்டை மருத்துவ " என்ற தலைப்பில்  கலந்துரையாடல்  நிகழ்வு 22.02.2025 சனிக்கிழமை காலை  11.00 மணியளவில்  தரைத்தளத்தில் உள்ள பல்வகைப்  பயன்பாட்டு அரங்கத்தில்  நடைபெற உள்ளது . இந்நிகழ்வில் மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



"ஆய்வாளர் அரங்கம்" 19.02.2025 புதன்கிழமை மாலை 04.00 மணி நடைபெற்றது

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 19.02.2025 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப் பிரிவில் (Multimedia section ) "ஆய்வாளர் அரங்கம்" எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மதுரை தியாகராசர் கல்லூரி ஆய்வு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்து கலந்துரையாட உள்ளார்.  இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்!



சிறுவர்களுக்கான "எண்களில் ஓவியம் வரையலாம் வாருங்கள்" - திருமதி.ரா.ஞானசுந்தரி கார்த்திகேயன் , ஆசிரியர், அவர்களின் | 16.02.2025 காலை 11.00 மணி

 வணக்கம் !

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று(09.02.2025 )ஞாயிறுகாலை 11.00 மணிக்கு திருமதி.ரா.ஞானசுந்தரி கார்த்திகேயன், அவர்களின் "எண்களில் ஓவியம் வரையலாம் வாருங்கள்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில், ஆசிரியர் ஞானசுந்தரி கார்த்திகேயன் அவர்கள், முதலில் குழந்தைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளை தூண்டும் வகையில் பயிற்சி அளித்து , எண்களை பயன்படுத்தி  ஒற்றுமையை வலியுறுத்தும் கதைக்கூறி , எண்களின்  மூலம் ஓவியம் வரைவது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் பயிற்சி வழங்கினார் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...









"யாதுமாகி நின்றாய் சக்தி" நிகழ்ச்சி | 15/02/2025, மாலை 5 மணி

அனைவருக்கும் வணக்கம்! 


நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும் பெண்களுக்கான சிறப்பு  நிகழ்ச்சியான யாதுமாகி நின்றாய் சக்தி இன்று மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை நடைபெற்றது இதில் பெண்கள் தங்களது தனித்திறமைகளான ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல், கவிதை கூறுதல், பியானோ மியூசிக் வாசித்தல், கரகமாடுதல், நகைச்சுவை கூறுதல் மற்றும் தனது பேச்சுத்திறமை ஆகியவற்றை மேடையில் அரங்கேற்றினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும் இந்நிகழ்ச்சியை காண வந்திருக்கும் பெண் வாசகர்கள் மட்டுமல்லாது ஆண் வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்


புகைப்படத் தொகுப்பு :

https://drive.google.com/drive/folders/1ct5v_utksuWRmGrFO7OVddvZQMzSMJyA?usp=drive_link