• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Diffrently Abled Section : Conveniently located at the Ground floor, the Diffrently Abled Section has 1000 printed books in Braille format, audio books etc. Four numbers of wheel chairs are available at the section for the use of Differently Abled users.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

குட்டி குட்டி அறிவியல் சோதனைகள்" "- திருமதி, S. மாலதி, ஆசிரியர் அவர்களின், | (27.04.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணி

 வணக்கம் !
மதுரை-கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் போன்ற மாறுபட்ட தலைப்புகளில் ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக இந்த வாரம் (27.04.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமதி, S. மாலதி, ஆசிரியர் அவர்களின் "குட்டி குட்டி அறிவியல் சோதனைகள்""என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 
அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids 




" Over the Hedge " - திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | (26.04.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணி

வணக்கம்!

மதுரை- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ,குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை விரிவுபடுத்துகின்ற வாய்ப்பாகவும், உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும் ,குழைந்தைகளுக்கான திரைப்படம் திரையிடுதல் மற்றும் கலந்துரையாடல் என்னும் நிகழ்வு வாரம்தோறும் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் இந்தவாரம் (26.04.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "Over the Hedge " என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். நன்றி. ..

அனுமதி இலவசம்!. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.

முன்பதிவுக்கு ::http://tinyurl.com/kcltheatre



" 12th Popular science lecture on"Environment and birds"(சுற்றுச்சூழலும் பறவைகளும்) | முனைவர்V.கிருபாநந்தினி (பறவையியலாளர்) 25.04.2025) வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி

 வணக்கம்,கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை , இணைந்து (25.04.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு " 12th Popular science lecture on"Environment and birds"(சுற்றுச்சூழலும் பறவைகளும்)என்னும் தலைப்பில் முனைவர்V.கிருபாநந்தினி (பறவையியலாளர்)அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . அனுமதி இலவசம்!, நன்றி ..

முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCL-TNSF1





உலக புத்தக தினத்தை முன்னிட்டு 23.04.2025 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு இன்று  மாலை 5.00 மணி அளவில் பல்வகை பயன்பாட்டு அரங்கில்  "புத்தகம் - வாசிப்பு - நூலகம்" என்ற தலைப்பில் பல்வேறு ஆளுமைகள் வாசகர்களுடன் வாசிக்கும் பழக்கம் என்பது எவ்வாறு மேம்பட வேண்டும் எனவும் புத்தகமும் நூலகமும் எவ்வாறு சமூக தொடர்பை வலுப்படுத்தும் என்பதைப் பற்றியும் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.








“ நூல் அரும்புகள் ” புத்தக விமர்சனம் ( Book review ) | 20.04.2025 காலை 10.30 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி (20.04.2025 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது . 









முத்தமிழ் முற்றம் 25.04.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி "கலைஞர் பார்வையில் தொல்காப்பியம்"

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "25.04.2025" வெள்ளிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "கலைஞர் பார்வையில் தொல்காப்பியம்" என்ற தலைப்பில் முனைவர்.தி.மல்லிகா உதவிப் பேராசிரியை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.




"களிமண் பொம்மைகள் செய்தல் பயிற்சி "- திரு.தாளமுத்து ஓவியர், | (20.04.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 20.04.2025 அன்று காலை 11.00 மணிக்கு  திரு.தாளமுத்து ஓவியர், அவர்களின் "களிமண் பொம்மைகள்   செய்தல்" என்ற நிகழ்ச்சி   சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் முதலில் குழந்தைகளுக்கு களிமண் கொடுத்து அவர்களின் கற்பனையில் உருவாகும்  பொம்மைகளை(குருவி ,வாத்து ,பூக்கள் ,சமையல் அறை பொருட்கள்,விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை  அவர்களே செய்யும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது  . மேலும் ஓவியர் திரு. தாளமுத்து அவர்களும் குழந்தைகளுக்கு பல்வேறு பொம்மைகளைஎளிய செயல் விளக்கங்களுடன் கற்றுக்கொத்தார்கள் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...