குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் "Happy Kids Hub" (19.04.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
அனைவருக்கும் வணக்கம்!
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று (19/04/2026 ) ஞாயிறு காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மற்றொரு நிகழ்வாக .இந்நிகழ்வில் செல்வி .சந்தியாஸ்ரீ மற்றும் செல்வி. ஹர்ஷவர்த்தினி (உளவியலாளர்கள்) மெனடோரா பவுண்டேஷன் -மதுரை அவர்கள் *”Happy Kids Hub”*என்னும் தலைப்பில்
குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்தத் தருணத்தில்,
“Reducing stress and focus learning through fun activities”
(மகிழ்ச்சியான செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து கற்றலில் கவனத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை சிறிய சிறிய செயல்பாடுகளின் மூலம் குழந்தைகளுக்கு விளக்கி உணர வைத்தார் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..
இந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு:https://www.facebook.com/share/p/1BdjAUfxJs/






.jpeg)

.jpeg)