• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Diffrently Abled Section : Conveniently located at the Ground floor, the Diffrently Abled Section has 1000 printed books in Braille format, audio books etc. Four numbers of wheel chairs are available at the section for the use of Differently Abled users.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

இளையோர் களம் 06/06/2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

அனைவருக்கும் வணக்கம்- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (06.06.2025) வெள்ளிக்கிழமை  இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்"‌ நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், பள்ளி மாணவிகள் அனைவரும் பங்கேற்று தங்களது திறமைகளை நடனம், சொற்பொழிவு மூலம் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி









"யாதுமாகி நின்றாய் சக்தி " 21.06.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை "கலைகளின் முகவரி பெண்மையே"

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர நிகழ்ச்சியாக 21.06.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை "கலைகளின் முகவரி பெண்மையே" என்ற தலைப்பில் கவிஞர்.பா.மகாலட்சுமி, மாநில பெண் படைப்பாக்க குழு (த.மு.எ.க.ச) அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம்

வணக்கம் , மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி (08.08.2025 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது .








நிலவொளியில் 10/06/2025 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியானது இந்த மாதம் வருகின்ற 10 ஆம் தேதி   செவ்வாய்க்கிழமை   மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கின்றது இதில் புத்தகங்களை விமர்சனம் செய்யலாம் தாங்கள் படித்து உணர்ந்த புத்தகத்தின் மேன்மையான கருத்துக்களை இங்கே பதிவிடலாம், தனது சொந்த கவிதைகளை சமர்ப்பிக்கலாம் இலக்கியங்கள் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். சங்க கால இலக்கியங்கள் பற்றிய உரை நிகழ்த்தலாம்.  பார்வையாளராகவும் பங்கேற்கலாம் 

இதில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட இனைப்பில் பதிவு செய்து தாங்கள் படைக்க இருக்கும் படைப்பின் விவரங்களையும் இதில் பதிவு செய்து விடுங்கள்.

முன்பதிவிற்கு :

  https://tinyurl.com/nilavozhiyil

நாள் :  10/06/2025  செவ்வாய்க்கிழமை

நேரம் : மாலை 6 மணி முதல் 7 மணி வரை

இடம் :  கலைஞர் நூற்றாண்டு நூலகம்  நான்காம் தளம்




"The Snow Queen and the Princess" - சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | (07.06.2025) 4 PM

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (07.06.2025)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான "The snow queen and the princess" என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர், அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி ...









சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான கார்ட்டூன் வழியாக அறிவியல்(Science through Cartoons)" - முனைவர்.க.கண்ணன். உதவி பேராசிரியர் | 08.06.2025 காலை 11.00 மணி

வணக்கம் ! மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (08.06.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு முனைவர். க.கண்ணன். உதவி பேராசிரியர்,உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை,அமெரிக்கன் கல்லூரி,மதுரை. அவர்களின் " கார்ட்டூன் வழியாக அறிவியல்(Science through Cartoons)" என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ...  அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids




கலைஞரும் கலை இலக்கியமும் | 03.06.2025 மாலை 4.00 மணி

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கலைஞரும் கலை இலக்கியமும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்  முனைவர்.சு. முத்து இலக்குமி, முனைவர் இ. கி.ராமசாமி மற்றும் திரு. தேவராஜ் அதிசயராஜ் ஆகியோர் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.