"நிலவொளியில்" வெள்ளிக்கிழமை 08/08/2025 மாலை 6 மணிக்கு

Posted by Mohanraj on August 01, 2025

அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியானது   08/08/25 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கின்றது இதில் புத்தகங்களை விமர்சனம் செய்யலாம் தாங்கள் படித்து உணர்ந்த புத்தகத்தின் மேன்மையான கருத்துக்களை இங்கே பதிவிடலாம், தனது சொந்த கவிதைகளை சமர்ப்பிக்கலாம் இலக்கியங்கள் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். சங்க கால இலக்கியங்கள் பற்றிய உரை நிகழ்த்தலாம்.  பார்வையாளராகவும் பங்கேற்கலாம்

இதில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட இனணப்பில் பதிவு செய்து தாங்கள் படைக்க இருக்கும் படைப்பின் விவரங்களையும் இதில் பதிவு செய்து விடுங்கள்..


 முன்பதிவிற்கு : https://tinyurl.com/nilavozhiyil

 நாள் : 08/08/2025    வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி முதல் 7 மணி வரை

 இடம் :  கலைஞர் நூற்றாண்டு நூலகம்  நான்காம் தளம்


Categories: