Day-25 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 27, 2025

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு (01.05.2025 ) முதல் நடைபெற்றுவருகின்றது  அதன்படி  இன்று 27.05.25) காலை 11.00 மணிக்கு திருமதி.பி. விஜயலக்ஷ்மி அவர்களின் " யாதும் யோகா யாவரும் கேளிர் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி.பி. விஜயலக்ஷ்மி அவர்கள்  ,குழந்தைகளுக்கான அடிப்படை யோகா ஆசனங்கள் பற்றி எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.இன்றைய  நிகழ்வு குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையில் அமைந்தது .இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.








Categories: