Day-18 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 20, 2025

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு (01.05.2025 ) முதல் நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(20.05.25) காலை 11.00 மணிக்கு முனைவர்.S.உஷா , பேராசிரியர் அவர்களின் "சொல்லோடு விளையாடு!" என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் முனைவர்.S. உஷா அவர்கள் ,கொடுக்கப்பட்ட எழுத்துக்களிலிருந்து வார்த்தைகளை உருவாக்குவது,ஓரெழுத்து ஒரு மொழி ,எழுத்து வரிசைப்படுத்துதல் போன்ற பல்வேறு சொல் விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார், இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு சொல்லகராதி திறன்களையும், மொழித் திறன்களையும்  வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.மேலும் கடந்த (22.06.2024)  முதல் சனிக்கிழமை  தோறும் மாலை 5.30 மணிக்கு குழந்தைகள் பிரிவில் நடைபெற்று வந்த “Chess@KCL” என்ற வாராந்திர சதுரங்க பயிற்சியில் பங்குபெற்றவர்களில்  வயது (06-10) வரையிலான  குழந்தைகளுக்கு சதுரங்க போட்டி  இன்று நடைபெற்றது.மேலும் திரு.சிவசங்கர் அவர்களின் ஐந்து நாள் "ஜும்பா நடனம் " பயிலரங்கும்  இன்று இனிதே நிறைவுற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.









Categories: