Day-17 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 19, 2025

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(19.05.25) காலை 11.00 மணிக்கு திரு. ஜோதிபாசு அவர்களின் "ஒயிலாட்டம் பயிற்சி" என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு. ஜோதிபாசு அவர்கள் ஒயிலாட்ட அடவுகள் கற்றுத்தந்து ,ஒவ்வொரு அடவின் கால் அசைக்கும் முறை,ஒயிலாட்டப் பாடலுக்கு ஆடுவது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.மேலும் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்றுவந்த திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி"பயிற்சிப்பட்டறை இன்றுடன் இனிதே நிறைவுற்றது. திரு.சிவசங்கர் அவர்களின் நான்காம் நாள் "ஜும்பா நடனம் " பயிலரங்கும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.








Categories: