Day-19 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 21, 2025

வணக்கம் !பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு (01.05.2025 ) முதல் நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(21.05.25) காலை 11.00 மணிக்கு திரு. N .வெங்கடசுப்ரமணியன் அவர்களின் "கார்டூன் சேனல்களும் அதன் தாக்கமும்" என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு. N .வெங்கடசுப்ரமணியன் அவர்கள் கார்டுன் சேனல் தொடர்ந்து பார்ப்பதினால் ஏற்படும் விளைவுகள்(தூக்கமின்மை,தூக்கமின்மையால் ஏற்படும் பசியின்மை,மிக மோசமான கவனச் சிதறல்,ஞாபக மறதி, கற்பனை திறனில் தேக்கம்,விளையாட்டின் மீது மொத்தமாக ஆர்வம் குறைவது,அதிக மன அழுத்தத்தினால் பயம்) குறித்து எளிய முறையில் எடுத்துரைத்தார்,
மேலும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார்.மற்றொரு நிகழ்வாக கடந்த (22.06.2024)  முதல் சனிக்கிழமை  தோறும் மாலை 5.30 மணிக்கு குழந்தைகள் பிரிவில் நடைபெற்று வந்த “Chess@KCL” என்ற வாராந்திர சதுரங்க பயிற்சியில் பங்குபெற்றவர்களில்  வயது (06-12) வரையிலான  குழந்தைகளுக்கு சதுரங்க போட்டி  இன்று நடைபெற்றது.மேலும் திருமதி.M .S ஹம்சி சுகன்யா அவர்களின் மூன்று நாள் "பாரம்பரிய விளையாட்டுப்பயிற்சி " பயிலரங்கும்  இன்று இனிதே துவங்கியது .இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.






 

Categories: