Day-16 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(18.05.25) காலை 11.00 மணிக்கு திரு.தன்ராஜ் மாணிக்கம் (திரைப்பட இசையமைப்பாளர்)அவர்களின் "யாவரும் இசைக்கலாம்! " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு.தன்ராஜ் மாணிக்கம் அவர்கள் ,கீ போர்டு இசைக்கருவி இசைப்பது குறித்த அடிப்படை நோட் ,மற்றும் அதில் உள்ள நுணுக்கங்களை எளிய செயல்விளக்கங்களோடு கற்றுக்கொடுத்தார் மேலும் பங்குபெற்ற குழந்தைகள் அனைவருக்கும் கீ போர்டு இசைக்கருவியை இசைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் . மேலும் ஆறாம் நாள் பயிற்சிப்பட்டறை நிகழ்வாக திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி"யும் , திரு. சிவசங்கர் அவர்களின் மூன்றாம் நாள் "ஜும்பா நடனம் " பயிலரங்கும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.