Day-15 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(17.05.25) காலை 11.00 மணிக்கு திரு.சிவராமன் அவர்களின்"மரம் அறிவோம் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு.சிவராமன் அவர்கள்மரங்களின் பெயர்கள், அதன் வளர்ச்சிமுறைகள் ,சிறப்புகள் , மரங்களின் பயன்பாடு, மரங்களை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளை போன்றவற்றை மரக்கன்றுகளோடு எளிய செயல்விளக்கங்களுடன் விளக்கக்காட்சி வாயிலாகவும் , குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார் . மேலும்ஐந்தாம் நாள் பயிற்சிப்பட்டறை நிகழ்வாக திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி"யும் , திரு. சிவசங்கர் அவர்களின்இரண்டாம் நாள் "ஜும்பா நடனம் பயிற்சி " பயிலரங்கும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.