Day-14 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 16, 2025

வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(16.05.25) காலை 11.00 மணிக்கு திரு.திண்டுக்கல் தமிழ்பித்தன் அவர்களின்"கதையும் ஓவியமும் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு  திண்டுக்கல் தமிழ்பித்தன் அவர்கள் ஓவியத்தின் மூலம் கதைசொல்வது மற்றும் கதை எழுதுவது குறித்து சிறப்பாக பயிற்சியளித்தார். மேலும் நான்காம்  நாள் பயிற்சிப்பட்டறை  நிகழ்வாக திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "சதுரங்க பயிற்சி"யும் ,  திரு. சிவசங்கர் அவர்களின் "ஜும்பா நடனம் பயிற்சி " பயிலரங்கு இன்று இனிதே துவங்கியது. .இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.






Categories: