Day-10 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள்கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று( 10.05.25) காலை 11.00 மணிக்கு திருமிகு .வெ .கிருபாநந்தினி அவர்களின் "பறவைகள் அறிவோம் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது ,இந்நிகழ்வை PWD தலைமை பொறியாளர் மற்றும் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அவர்களும் தலைமையேற்று தொடங்கி வைத்தனர் , மேலும் திருமதி. அ.கௌசல்யா, மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் "அபாகஸ் அடிப்படை பயிற்சி ,மற்றும் திரு. ஆன்டனி, அவர்களின் "டிசைனிங் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி" போன்ற பயிற்சிப்பட்டறைகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று இன்றுடன் இனிதே நிறைவுற்றது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்று பயன்பெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.