”கோடைக் கொண்டாட்டம் 2025” கலை நிகழ்ச்சிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி | 31.05.2025
வணக்கம் !
பொதுநூலக இயக்கம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை.
”கோடைக்கொண்டாட்டம் 2025” நிகழ்வுகளின் இறுதி நிகழ்வாக இன்று ( 31.05.2025 ) காலை 11.00 மணிக்கு, பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ட்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் திருமிகு. சித்ரா விஜயன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோடைகால பயிற்சிப்பட்டறையில் பயிற்சிப்பெற்றவர்களுக்கும் மற்றும் Chess@KCL -2025 சதுரங்கப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும்நன்றிகள்.