”கோடை கொண்டாட்டம் 2024" ( பாட்டு புதுப்பாட்டு பாடு விளையாடு) - திருமதி.ராணி குணசீலி | 11.05.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 11, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் பதினொன்றாவது நிகழ்ச்சியாக திருமதி.ராணி குணசீலி அவர்களின் "பாட்டு புதுப்பாட்டு பாடு விளையாடு " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமதி.ராணி குணசீலி அவர்கள் குழந்தைகளுக்கு அவர் எழுதிய பாடல்களையும் ,அழ வள்ளியப்பா பாடல்களையும் பாட்டோடு சேர்ந்த விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மூலம் குழந்தைகளுக்கு பாட்டு கற்பித்தார் .குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events