”கோடை கொண்டாட்டம் 2024" ( பாட்டு புதுப்பாட்டு பாடு விளையாடு) - திருமதி.ராணி குணசீலி | 11.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் பதினொன்றாவது நிகழ்ச்சியாக திருமதி.ராணி குணசீலி அவர்களின் "பாட்டு புதுப்பாட்டு பாடு விளையாடு " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமதி.ராணி குணசீலி அவர்கள் குழந்தைகளுக்கு அவர் எழுதிய பாடல்களையும் ,அழ வள்ளியப்பா பாடல்களையும் பாட்டோடு சேர்ந்த விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மூலம் குழந்தைகளுக்கு பாட்டு கற்பித்தார் .குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
.jpeg)
.jpeg)


