” கோடைக் கொண்டாட்டம் 2024 " திருமதி.விஜயலக்ஷ்மி மற்றும் அமுதா செல்வி (வில்லுப்பாட்டு மற்றும் கதைகளின் ) - | 07.05.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 07, 2024
”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் ஏழாவது நிகழ்ச்சியாக திருமதி.விஜயலக்ஷ்மி மற்றும் அமுதா செல்வி அவர்களின் "வில்லுப்பாட்டு மற்றும் கதைகள் " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமதி.விஜயலக்ஷ்மி மற்றும் அமுதா செல்வி அவர்கள் குழந்தைகளுக்கு நெகிழி பை தவிர்த்தல் ,மரக்கன்று நடுதல் ,குழந்தைகளுக்கான அவசர உதவி எண்கள் , குட் டச், பேட் டச் பற்றி வில்லுப்பாட்டு மற்றும் கதைகளின் வழியாக குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர் ,குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events