யாதுமாகி நின்றாய் சக்தி "மன அழுத்தத்தில் இருந்து மன அமைதிக்கான பயணம், வாருங்கள் தோழிகளே" 18/04/26 சனிக்கிழமை மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை
அனைவருக்கும் வணக்கம் !
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவ து சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் மன அழுத்தத்தில் இருந்து மன அமைதிக்கான பயணம், வாருங்கள் தோழிகளே ! என்ற தலைப்பில் இன்று 18/04/26 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை செல்வி. சந்தியாஸ்ரீ TRK உளவியலாளர் மெனடோரா பவுண்டேஷன் மதுரை அவர்கள் தனக்கே உரித்தான முறையில் அனைவரிடமும் பேசி அன்றாட நிகழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்கான நான்கு வழி முறைகளை (தவிர்க்கவும் (Avoid), மாற்றவும் (Alter), ஏற்றுக்கொள் (Accept), சூழ்நிலைக்கேற்ப மாற்றுதல் (Adapt) சிறந்த முறையில் பயிற்சி உடன் எடுத்துரைத்தார். வாசகர்கள் தங்களது மன அழுத்தத்தை அரங்கத்தில் பகிர்ந்து அதற்க்கான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு :https://www.facebook.com/share/p/1BAMA6r3J7/
