"நூல் அரும்புகள் " & " Phonic Magic -Turning letters into little wonders " 09.11.2025 ஞாயிறு காலை 10.30 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்!
மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று (09.11.2025) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் (Book review) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு டோரா ஸ்கார்லின் (English Coach &Phonics Trainer ),அவர்கள் வழங்கும் " Phonic Magic -Turning letters into little wonders" எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருமிகு.டோரா ஸ்கார்லின் அவர்கள், ஆங்கில எழுத்துக்களின் ஒலியமைப்பை குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடல், இசை, நடன அசைவுகள், உடல் சைகைகள்,யானை உருவம் கொண்ட ஒலி எழுத்து / ஒலி வடிவக் கலை போன்ற பல புதுமையான முறைகளில் கற்றுக்கொடுத்தார். போனிக்ஸ் (Phonics) மூலம் எழுத்துப்பிழை (spelling) ,வாசித்தல் (Reading) ,எழுத்துக்களை எவ்வாறு உச்சரிப்பது (pronunciation) குறித்து குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் , மிக தெளிவாக செயல் முறை வடிவிலும், விளக்கக்காட்சி வாயிலாகவும் எடுத்துரைத்தார் . இந்நிகழ்வானது குழந்தைகளின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக மிக சிறப்பாக அமைந்தது. இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...
இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு: https://www.facebook.com/share/p/1Fr126Z9PC/