சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான " ”பாட்டும் பாடமும்” - திருமிகு.S.அனந்த சொரூப சாந்தி,ஓய்வு பெற்ற பேராசிரியர், அவர்கள் - 07.09.2025 ஞாயிறு காலை 11.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 01, 2025

 வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. 

அதன்படி (07.09.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு.S.அனந்த சொரூப சாந்தி ,ஓய்வு பெற்ற  பேராசிரியர், அவர்கள் வழங்கும் "பாட்டும் பாடமும் ” எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.   நன்றி ... அனுமதி இலவசம் 

முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids



Categories: