"Abacus@KCL" சனிக்கிழமை (23.08.2025) மாலை 5.30 மணிக்கு
வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற்றுவருகின்றது . அந்த வகையில் (23.08.2025) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 3வது "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி ...