Day-20 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”
வணக்கம் !
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு (01.05.2025 ) முதல் நடைபெற்றுவருகின்றது அந்தவகையில் இன்று(22.05.25) காலை 11.00 மணிக்கு திரு. யாழிசை நாகராஜ் அவர்களின் "கலை மற்றும் கைவினை" என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரு. யாழிசை நாகராஜ் அவர்கள், வண்ணத்தாள்களில் வண்ணப்பூக்கள் செய்வது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.மற்றொரு நிகழ்வாக குழந்தைகள் பிரிவில் நடைபெற்று வந்த “Chess@KCL” என்ற வாராந்திர சதுரங்க பயிற்சியில் பங்குபெற்றவர்களுக்கு வயது (06-18) வரையிலான குழந்தைகளுக்கு சதுரங்க போட்டி இன்றுடன் இனிதே நிறைவுற்றது .மேலும் திருமதி.M .S ஹம்சி சுகன்யா அவர்களின் இரண்டாம் நாள் "பாரம்பரிய விளையாட்டுப்பயிற்சி "பயிலரங்கும் இன்று சிறப்பாக நடைபெற்றது .இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்