கோடைக்கொண்டாட்டம் -2025 - " ஓவிய பயிற்சி " - ஓவியர் திரு. ஸ்ரீரசா | (13.05.2025 முதல் 15.05.2025 வரை) 11.00AM

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 27, 2025

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025”  என்ற நிகழ்வு நடைபெறவிருக்கின்றது .இதில்  மே மாதம் முழுவதும் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களைக்கொண்டு தினசரி நிகழ்வுகளும் , திறன் மேம்பாட்டு பயிற்சிப்பட்டறைகளும் நடைபெறவிருக்கின்றன.அந்த வகையில்  (13.05.2025 முதல் 15.05.2025 வரை) ஓவியர் திரு. ஸ்ரீரசா, அவர்களின் "4. ஓவிய பயிற்சி" என்ற  பயிற்சிப்பட்டறை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிப் பட்டறையில்  அடிப்படை ஓவியம்,கோட்டோவியம்  வரைவது  குறித்த நுணுக்கங்கள் மற்றும் முழுமையான பயிற்சியும் அளிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் ஆகவே முன்பதிவு அவசியம். இதில் பங்கு பெறும் சிறுவர்களுக்கு (31.05.2025) அன்று நடைபெறும் நிகழ்வில்  பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.  அனுமதி இலவசம்!  நன்றி ...















Categories: