கோடைக்கொண்டாட்டம் -2025 - " கதை எழுதுதல் பயிற்சி " - திரு.க .சரவணன் | (05.05.2025 முதல் 07.05.2025 வரை) 11.00AM
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெறவிருக்கின்றது .இதில் மே மாதம் முழுவதும் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களைக்கொண்டு தினசரி நிகழ்வுகளும் , திறன் மேம்பாட்டு பயிற்சிப்பட்டறைகளும் நடைபெறவிருக்கின்றன.அந்த வகையில் (05.05.2025 முதல் 07.05.2025 வரை) திரு.க .சரவணன், அவர்களின் "3. கதை எழுதுதல் பயிற்சி" என்ற பயிற்சிப்பட்டறை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிப் பட்டறையில் கதை எழுதுவது குறித்த நுணுக்கங்கள் மற்றும் முழுமையான பயிற்சியும் அளிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் ஆகவே முன்பதிவு அவசியம். இதில் பங்கு பெறும் சிறுவர்களுக்கு (31.05.2025) அன்று நடைபெறும் நிகழ்வில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவர்கள் எழுதிய கதைகளில் சிறந்த கதைகள் தேர்வு செய்யப்பட்டு 31.05.2024 அன்று நூலகத்தில் நடைபெறும் நிகழ்வில் கௌரவிக்கப்படுவார்கள். ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அனுமதி இலவசம்! நன்றி ...