யாதுமாகி நின்றாய் சக்தி 15.02.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி நடைபெற்றது
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியான யாதுமாகி நின்றாய் சக்தி இன்று மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை நடைபெற்றது இதில் பெண்கள் தங்களது தனித்திறமைகளான ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல், கவிதை கூறுதல், பியானோ மியூசிக் வாசித்தல், கரகமாடுதல், நகைச்சுவை கூறுதல் மற்றும் தனது பேச்சுத்திறமை ஆகியவற்றை மேடையில் அரங்கேற்றினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும் இந்நிகழ்ச்சியை காண வந்திருக்கும் பெண் வாசகர்கள் மட்டுமல்லாது ஆண் வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்













