” கோடைக் கொண்டாட்டம் 2024 ” (கதையும் ஓவியமும் ) - திரு. திண்டுக்கல் தமிழ்பித்தன் |22.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (22.05.2024 ) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் இருபத்திரெண்டாம் நாள் நிகழ்ச்சியாக திரு .திண்டுக்கல் தமிழ்பித்தன் அவர்களின் "கதையும் ஓவியமும் " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரு திண்டுக்கல் தமிழ்பித்தன் அவர்கள் ஓவியங்கள் மூலம் கதைகளை கூறி, குழந்தைகளிடம் ஓவியத்தை காண்பித்து அதன் தொடர்பான கதைகளை குழந்தைகளே சொல்லும் வகையில் பயிற்சி வழங்கினார் , இது குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதுடன் , கற்பனை திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.