” கோடைக் கொண்டாட்டம் 2024 ” (கலை மற்றும் கைவினை) - திரு. யாழிசை நாகராஜ் | 17.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் பதினேழாவது நிகழ்ச்சியாக முனைவர் ,திரு. யாழிசை நாகராஜ் அவர்களின் "கலை மற்றும் கைவினை" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரு. யாழிசை நாகராஜ் அவர்கள் கழிவுப்பொருள்களில் இருந்து கலை மற்றும் கைவினைப்பொருட்கள் செய்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.





