குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை

Posted by Sindumathi S on December 29, 2025

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி  பட்டறை நிகழ்வாக  (26.12.2025 முதல் 28.12.2025 வரை)  காலை 11.00 மணிக்கு , திருமிகு.A.செய்யது இப்ராஹிம் , Art Teacher -Velammal Vidyalaya Viraganoor (Madurai), அவர்களின்  "Art & Craft" என்ற 3 நாள் பயிற்சிப் பட்டறை இன்று (28.12.2025)  இனிதே நிறைவுபெற்றது, இன்றைய நிகழ்வில் திருமிகு.A.செய்யது இப்ராஹிம் ,அவர்கள்  தூரிகை வண்ணத் துணி ஓவியம் வரையவது பற்றி செய்முறை விளக்கங்களுடன் நேரடிப் பயிற்சியின் மூலம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் ,மேலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மன வரைபடம் (Mind Map ) வரையச்செய்து அதில் சிறந்த சில வரைபடங்களை தேர்வுசெய்து அவர்களுக்கு தூரிகை வண்ணத் துணி ஓவியம் வரையச்செய்து சிறந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபெற்று தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.



இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு :https://www.facebook.com/share/p/1Fp3xYaKmK/