“கதைக்கலாம் வாங்க ! (நிகழ்த்துக்கலை)” 04.01.2026 ஞாயிறு காலை 11.00 மணி
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும்,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது.
அதன்படி (04.01.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு.க.சரவணன்,தலைமை ஆசிரியர்,சிறார் எழுத்தாளர்,கதைசொல்லி,அவர்கள் வழங்கும் “கதைக்கலாம் வாங்க ! (நிகழ்த்துக்கலை)” எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி...,அனைவரும் வருக! அனுமதி இலவசம்!.
இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids
