"திருவள்ளுவர் சிலை- வெள்ளி விழா" கொண்டாட்டத்தை முன்னிட்டு 28-12-2024
வணக்கம் !
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை , பொதுநூலக இயக்ககம் சார்பில் நடத்தப்படும் , "திருவள்ளுவர் சிலை - வெள்ளி விழா" கொண்டாட்டத்தை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி ,கருத்தரங்கம் மற்றும் பரிசுப்போட்டிகள் (23.12.24 முதல் 31.12.24 வரை )கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் குழந்தைகளுக்கான “திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி” இன்று (28.12.24) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தரைத்தளத்தில் உள்ள மாநாட்டுக்கூடத்தில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பங்குபெற்ற நடுவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் நன்றி ...




