"பனை விதையில் பாரம்பரிய பொம்மைகள் செய்தல் பயிற்சி" - திரு .க.அசோக்குமார் | 01.09.2024, 11 AM

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 29, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (01.08.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு .க.அசோக்குமார்  அவர்களின்   " பனை விதையில் பாரம்பரிய பொம்மைகள் செய்தல் பயிற்சி " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில்  திரு .க.அசோக்குமார் அவர்கள் பனை மரத்தின் சிறப்புகள்  மற்றும்  அதன் மூலம் கிடைக்கும் பொருட்கள் குறித்தும் ,பனையின் வேர் முதல் நுனி வரை அதன்பயன்கள் ,  அதனை  எவ்வாறு பாதுகாப்பது    என்பது குறித்து உரையாற்றியதோடு , பனை விதையில் பொம்மைகள் செய்வது குறித்து எளியமுறையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இந்த நிகழ்வு  குழந்தைகளுக்கு  பனையின் பயன்பாடு குறித்தும் அவற்றை பாதுகாப்பதின்  அவசியம் பற்றியும் அறியும் வாய்ப்பாக அமைந்தது .குழந்தைகளும்   அதிக ஆர்வத்தோடு பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.














Categories: