"பனை விதையில் பாரம்பரிய பொம்மைகள் செய்தல் பயிற்சி" - திரு .க.அசோக்குமார் | 01.09.2024, 11 AM
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (01.08.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு .க.அசோக்குமார் அவர்களின் " பனை விதையில் பாரம்பரிய பொம்மைகள் செய்தல் பயிற்சி " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு .க.அசோக்குமார் அவர்கள் பனை மரத்தின் சிறப்புகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பொருட்கள் குறித்தும் ,பனையின் வேர் முதல் நுனி வரை அதன்பயன்கள் , அதனை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து உரையாற்றியதோடு , பனை விதையில் பொம்மைகள் செய்வது குறித்து எளியமுறையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு பனையின் பயன்பாடு குறித்தும் அவற்றை பாதுகாப்பதின் அவசியம் பற்றியும் அறியும் வாய்ப்பாக அமைந்தது .குழந்தைகளும் அதிக ஆர்வத்தோடு பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.